யுத்தங்கள் மண்ணில் ஓயவில்லை
யுகவர்க்கங்கள் இன்னும் தீரவில்லை
அடாவடிகள் இன்னும் அழியவில்லை
அடிமைச் சாசனங்கள் இன்னும் தேயவில்லை.
அடக்குமுறைகள் இன்னும் ஆறவில்லை
அராஐகங்கள் இன்னும் ஒழியவில்லை
மரண ஓலங்கள் இன்னும் மாறவில்லை
மனித நேயங்கள் இன்னும் காணவில்லை.
எல்லைக் கோடுகள் இனி நீங்குமா?
எதிரி படையெடுப்பின் நிலை மாறுமா?
இரத்தங்கள் நித்தம் சிந்துமா?
இளைய தலைமுறைகள் நாளும் மடியுமா?
கல்லறைகள் நித்தம் தொடருமா?
கண்களில் இரத்தம் வடியுமா?
காலங்கள் இனி மாறுமா?
கடை யுத்தங்கள் இனத்தீருமா?
மாறும் காலங்கள் வெகு தூரமில்லை
மக்கள் வாழ்க்கையோ இனி அலறலில்லை
மண்ணின் விடிவுக்கோ இனி உதயமுண்டு
மனித படைப்புக்கோ ஒரு நோக்கமுண்டு.
மரணங்கள் அங்கு ஏதுமில்லை
மனித நேயங்கள் கெம்பீகரிக்கும்
முந்தினவை என்றும் ஒழிந்து போகும்
முகங்களோ இனி மலர்ந்துபோகும்.
புதிய வானத்தை இனி பார்த்திடுவோம்
புதிய பூமியில் என்றும் வாழ்ந்திடுவோம்
புரியும் உண்மையில் நீ மகிழ்ந்திடு
புதிய தென்பினில் இனி உறங்கிடு.
படைப்பாளனோ இதை மாற்றுவான்
பகுத்துணர்வோன் இதை நோக்குவான்
புதிய வானத்தை இனி பார்த்திடுவோம்
புதிய பூமியில் என்றும் வாழ்ந்திடுவோம்.
பாலை வனங்கள் நீர் சுரக்கும்
பாழ் நிலங்கள் பயிர் செளிக்கும்
உலகம் அது புதிது
உரிமை அங்கு பெரிது
நீதி ஒளி கொடுக்கும்
நியாயம் நிலை எடுக்கும்.
சத்தியம் அதன் கொடி
நித்தியம் அதன் படி
புதிய வானம் அதைக் காண்போம்
புதிய பூமி அங்கு வாழ்வோம்.
ஆக்கம்
திருமலைத்தென்னவன்