ஒன்பதாம் வகுப்பில்
ஓரத்து வாங்கினில் இருந்து
ஓரக்கண்ணால் என்னை
புன்முறுவலுடன் பார்ப்பாள்
அவள் பாக்கின்ற பார்வை
கண் விழியின்
கறுப்பு வட்டம்
பாதியாக தெரியும் போது
எவ்வளவு சுகமாக இருந்நது
மீண்டும் மீண்டும் பார்க்கமாட்டாளா
இதயம் ஏங்கித் தவிக்கும்
எழுதும் போது என் பேனா
எதேற்சையாக உடைந்த போது
தன் போனாவை காட்டி
தரவா என்றாள்.
யாருக்கம் தெரியாமல்
கண்ணால் சைகை செய்து
வேண்டாம் என்றேன்
இன்ரவல் நேரம்
என்னருகில் வந்து
கையைப் பொத்தி
என் கைக்குள் திணித்தாள்
கடித்த அவள் ரொபியின்
பாதி என் கைக்குள்.
அவள் விழிகளால் மட்டும்
கதைத்தாள்………
என் இதயத்தில் இருந்து
உணர்வுகள் பொங்கி
சுகமாக இருந்தது
அவள் பார்க்கும் போது
அன்பின் பரிமாற்றத்தை
அள்ளி அள்ளித் தந்தாள்
அது தான் காதல் என்று
எனக்கு புரியவில்லையே….
வருடங்கள் பலஓடியும்
அவளின் விழிகளை
இன்றுவரை நான்
மறக்கவில்லை
ஏன்?
அதுதான் காதலை தந்த
கருவிழிகள்.
ஆக்கம்
திருமலைத்தென்னவன்